Header Ads



புலனாய்வு பிரிவினரால் தவம் மீது விசாரணை

நமது ஜனாஸாக்களை எரிக்கப்படாமல் - புதைக்கப்பட வேண்டுமென வேண்டும் ஒரு இலட்சம் கையொப்பம் பெற்றமை தொடர்பில் - சற்று முன்னர் 11.06.2020 அரச புலனாய்வினரால் துருவி துருவி விசாரிக்கப்பட்டேன். 

எமக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு என்றும் நிதி கிடைக்கிறது என்றும் - நம்மிலுள்ள இழிவானவர்கள் அனுப்பிய தகவல்களுக்கமைய இவ்வாறு விசாரிக்கப்பட்டது. 

நாங்கள் சஹ்ரான் போன்ற மிருகத்தனமானவர்களையும் தீவிரவாதத்தையும் வேரோடு புடுங்க நினைப்பவர்கள். வெறுத்து நிற்பவர்கள். 

ஆனால், எங்களுடைய சமூகத்திற்காக ஜனநாயக வழியில் எந்த சவாலையும் மீறி போராட்டக்கூடியவர்கள். இன்சா அல்லாஹ் என்றும் போராடுவோம். அது அரசிற்கு எதிரானதல்ல. நாங்கள் எங்கள் அரசிடம் கோராமல் வேறு யாரிடம் கோருவது?

இது எனக்கு புதிதல்ல. முஸ்லிம்களின் நிலங்களுக்காக போராடியதற்காக, நான்காம் மாடி வரை சென்று வந்த அனுபவம் எனக்குண்டு.

எனது குழந்தைகள் மற்றும் மனைவி வரை துருவியதுதான் மனதை நெருடுகிறது.

ஆனாலும், முன்பிருந்ததையும் விட வேகமாக நான் இனி இயங்குவேன். இன்சா அல்லாஹ். அல்லாஹ்வை தவிர வேறு யாரும் என்னை நிறுத்திட முடியாது. 

எனக்காக பிரார்த்தியுங்கள்.

அல்லாஹ் கரீம்

 - ஏ.எல்.தவம் -

No comments

Powered by Blogger.