Header Ads



சொந்த வாகனங்களில் பயணிக்கும் போதும், உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும் முகக்கவசங்கள் அணிய அவசியம் இல்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள் முகக்கவசங்களை எவ்வாறு அணிய வேண்டுமென பொது சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர் பபா பலிஹவதன விளக்கியுள்ளார்.

சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும் முகக்கவசங்கள் அணியவேண்டிய அவசியம் இல்லையென அவர் தெரிவித்தார்.

அதேபோல, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, எந்தவொரு பிரதேசங்களிலும் பொசன் பௌர்ணமியை முன்னிட்டு தானங்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறித்த பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தானங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் திட்டங்களை ஏற்பாடு செய்ய அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் இதற்காக சுகாதார பரிசோதகர்களிடம் கோரிக்கை முன்வைப்பதை தவிர்க்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.