Header Ads



புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள் இன்று (12) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வாகனேரி குளத்துமடு காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதில் ஐந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான அணியும் ஆடை ஒன்றும் மீட்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

No comments

Powered by Blogger.