Header Ads



என்னை ஒரு பயங்கரவாதி, என அறிவித்துள்ளார்கள் - ஞானசாரர்

கடந்த ஆட்சிக் காலத்தில் நான் பயங்கரவாதி என பேஸ்புக்கில் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தினால் தன்னுடைய படங்கள் மற்றும் பெயர் பேஸ்புக் கணக்கில் தணிக்கை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

நாட்டின் இஸ்லாமியத் தீவிரவாத நிலைமை குறித்து நான் பலமுறை தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இது தொடர்பாக ஏதாவது கவனம் செலுத்தியவர் அப்போதைய முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாத்திரமே என அவர் தெரிவித்தார்.

தற்போது அவர் இந்நாட்டின் ஜனாதிபதி என்பதால் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகச் சாதகமான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது என ஞானசார தேரர் தெரிவித்தார்.

6 comments:

  1. தன்னுடய சிந்தனைக்கு இனங்காத அனைவரையும் பயங்கரவாதி ஸஹ்ரான் கொலைசெய்ய ஆசைப்பட்டான்!


    அவ்வாறே இந்த ஞானசாரவும் அவர் சிந்தனையுடன் உடன்பட்டவர்களும் அவர்களின் நோக்கத்துடன் உடன்படாதவர்களை இலங்கை பூமியிலிருந்து அழிப்பதற்கு ஆசைப்பட்டு முயற்சிக்கின்றனர்

    இதற்கு தீவிரவாதி என்று சொல்வதா அல்லது பயங்கரவாதி சொல்வதா அதையும் ஞானசாரதான் சொல்லவேண்டும்

    ஞானசார செயல்படுவதுபோல் வேறு சிந்தனையுடய யாராவது செயல்பட்டால் அவருக்கு ஞானசார பயங்கரவாதி என்றுதான் கூறுகின்றார்!

    ReplyDelete
  2. பௌத்தமத சிந்தனையுள்ள பெரும்பான்மை சிங்கள மொழிமக்களின் அதிகவாக்குகளை இந்த அரசாங்கம் பெறுவதற்கு "ரத்தன தேரர் ஒரு உஉண்ணாவிரதம் இருந்து பெருபான்மை பொதுமக்களை *முஸ்லிம்களை அவதூறு கூறி பயங்காட்டினார்*

    பாராலுமன்ற தேர்தலுக்காக அது போன்ற ஒரு நாடகத்தை " முஸ்லிம்களை அவதூறு கூறி பெருபான்மை பயமுர்தி அந்தமக்களின் வாக்குகளை இந்த அரசாங்கத்திட்கு எடுப்பதற்கு இந்த நேரத்தில் இவ்வாறு ஞானசார செயல்படவேண்டும் என்று வேண்டப்பட்டுள்ளார்!

    ReplyDelete
  3. நீர் யாரென்பதை இந்த நாட்டில் வாழும் மக்கள் மட்டுமன்றி உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர். ஆட்சியமைககத் தேவைப்படும் போது மாத்திரம் ஒரு கொன்ரக்ைடக் கொடுத்தால் நீர் வத பெஹெத்,வத அமுட,வத பரோடா, வத கொத்து என எல்லாவற்றையும் கக்கி பெரும்பான்மை வாக்ைகப் பெற்றுக் கொள்ள உம்மைச் சரியாகப் பாவித்துவிட்டு கடந்த சனாதிபதித் தேர்தலில் செய்யது போல், தேர்தல் முடிந்ததும் கைகளுவி விடுவார்கள். இடையில் முஸ்லிம் சமூகத்தைத் தீண்டவேண்டும் என அரசாங்கம் திட்டம்போட்டால் மாத்திரம் உமக்கு கொன்ரக்ட் தருவார்கள். அதைச் செய்துவி்ட்டு பேசாமல் இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  4. நீர் யாரென்பதை இந்த நாட்டில் வாழும் மக்கள் மட்டுமன்றி உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர். ஆட்சியமைக்கத் தேவைப்படும் போது மாத்திரம் ஒரு கொன்ரக்ைடக் கொடுத்தால் நீர் வத பெஹெத்,வத அமுட,வத பரோடா, வத கொத்து என எல்லாவற்றையும் கக்கி பெரும்பான்மை வாக்ைகப் பெற்றுக் கொள்ள உம்மைச் சரியாகப் பாவித்துவிட்டு கடந்த சனாதிபதித் தேர்தலில் செய்யது போல், தேர்தல் முடிந்ததும் கைகளுவி விடுவார்கள். இடையில் முஸ்லிம் சமூகத்தைத் தீண்டவேண்டும் என அரசாங்கம் திட்டம்போட்டால் மாத்திரம் உமக்கு கொன்ரக்ட் தருவார்கள். அதைச் செய்துவி்ட்டு பேசாமல் இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  5. பிரபாகரன், ஸஹ்ரான், ஞானசார போன்ற தீவிரவாதிகளே இந்த நாட்டை அழித்து நாசப்படுத்தியவர்கள்

    ReplyDelete
  6. Yes your bhudist terrorist.

    ReplyDelete

Powered by Blogger.