Header Ads



நான் எப்போதும் உண்மையை பேசுபவன் - விமலவீர

(எம் .என்.எம்.அப்ராஸ்)

எதிர்வரும் தேர்தலின் பின் பொதுஜன பெரமுன தலமையிலான அரசாங்கமே ஆட்சி செய்ய உள்ளனர் கடந்த காலத்தில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அதிகமாக சேவைகளை செய்தது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமட்டுள்ள மாவட்ட வேடப்பாளரும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார் .

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனைக்கான இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு (25) வியாழன் இரவு கல்முனையில் உள்ள அவரில் இல்லத்தில் இடம்பெற்றது இதன் போது மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல வீதிகள் காபர்ட் வீதிகளாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் பல அபிவிருத்திகள் செய்தது எமது அரசாங்கத்திலாகும் 

நான் எப்போதும் உண்மையை பேசுபவன் நீங்கள் எங்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இன்னும் பல அபிவிருத்திகளையும் உங்கள் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும் மேலும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் அமைச்சராக இருந்து உங்களுக்கு நான் உங்களுக்கு பல சேவைகளை வழங்கியிருக்கிறேன் என்றார்.

No comments

Powered by Blogger.