Header Ads



சஜித் தலைமையில் வேலைத்திட்டம் - தேர்தல் வெற்றிக்குபின் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பிரதமர் சஜித் பிரேமதாச தலைமையில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து நாட்டுக்காக செயற்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு இருக்கின்றது.

வேலை செய்ய முடிந்த மற்றும் புதிதாக சிந்திக்கக் கூடியவர்கள் ஜனாதிபதிக்கு தேவையெனில், அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவை வழங்கும் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ரணில் மைத்ரீ உறவில் மக்கள் படித்த பாடம் போதும் அதைவிட மஹிந்தவே மேல் , சஜித் அனுபவம் போதாது

    ReplyDelete

Powered by Blogger.