Header Ads



மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக வௌியாகியுள்ள தகவல் பொய்யானது என மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அவ்வாறான எவ்வித கோரிக்கைகளும் தன்னிடம் முன்வைக்கவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் பதிலளித்தார்.

தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. வாழ்க்ைகயில் ஒருமுறை கிடைந்த இந்த பாக்கியத்தை விட்டு விட்டுப் போவேனா, என்ன கிறுக்கா?

    ReplyDelete

Powered by Blogger.