இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் பலி
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை இன்று -15- குருநாகல் கட்டுப்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூஜனி லியனகே (வயது 33 ) என்ற வீராங்கனையே உயிரிழந்தவராவார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சசிகலா சிறிவர்தன இவரின் மரணத்தை உறுதி செய்துள்ளார்.
இவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேறொரு வாகனத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment