Header Ads



தேர்தல் குற்றங்களை செய்வோரை, கைது ஆணையின்றியே கைது செய்யமுடியும் - மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுதல், விருப்பு தெரிவு இலக்கங்களுடன் பதாகைகளை வைத்தல் போன்ற குற்றங்களை செய்வோரை கைது ஆணையின்றியே கைது செய்யமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஏற்கனவே ஈடுபட்டு வருவதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கொழும்பின் - மட்டக்குளி மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களில் பரீட்சாத்த தேர்தல் நடத்தப்பட்டது.

இது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகதார ஒழுங்குவிதிகளின்கீழ் எவ்வாறு வாக்களிப்பது என்ற தெளிவை வழங்குவதற்காகவே இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.