சிறைச்சாலைகளுக்குள் அனுப்பப்படவிருந்த, சட்டவிரோத பொருட்கள் பிடிபட்டன
பொரளை, மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் அலைபேசிகள் மற்றும் பாகங்களை அனுப்பவதற்கு முயற்சித்த நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சோதனை செய்த போது, சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தயாரா வைத்திருந்த மேலும் சில பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment