Header Ads



இந்நாட்டின் பிரதமரான பின் ஒவ்வொரு கிராம சேவகர், பிரிவிற்கும் தொலைப்பேசி சேவையை ஆரம்பிப்பேன்

எதிர் வரும் பொதுத் தேர்தலில் இந்நாட்டின் பிரதமரான பின்னர் நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் ஒரு தொலைப்பேசி சேவையைத் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கொழும்பில் இடம்பெற்ற பொது பேரணியில் அவர் தெரிவித்தார்.

வட கொழும்பு பகுதியில் தேசிய பாடசாலைகள் எதுவும் இது வரைக்கும் இல்லை என்றும், தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் வட கொழும்பு பகுதியில் இரு தேசிய பாடசாலைகளை நிறுவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

2 comments:

  1. YAARAI EMAATHUKIRAI.MAANGAAI MADAYANADA NEE.
    INRU NAADU MULUVATHUM, THOLAIPESHI
    ILLAATHA ORU IDAM ALLATHU ORU
    MANITHA UYIRPADAIPU, ENGEI IRUKKIRATHU
    ENRU SHOL PAARKALAAM.
    MUTHALAAVATHU PENGALUDAYA,
    MAATHAVIDAAI TOWELUKKU ENNA
    NADANDATHU.

    ReplyDelete
  2. என்ன போடு போட்டாலும் இவர் மீண்டும் பதவிக்கு வருவார் என்பது மிகப் பெரிய புதிராக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.