99 பேரின் கட்சி உறுப்புரிமை - 22 ஆம் திகதி தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டார உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தடுத்து தடை உத்தரவு பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு ஜூன் மாதம் 22 ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திற் கொண்டு கொழும்பு நீதிமன்ற நீதிபதி அமாலி ரணவீரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment