9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுட்குட்படுத்திய, விஹாராதிபதிக்கு 8 ஆண்டு கடூழிய சிறை
அறநெறி பாடசாலை கல்வியை பெறச் சென்ற ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக பாலிய வன்புணர்வுட்குட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக கருதப்பட்ட விஹாராதிபதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் எட்டு ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.
கொலன்னாவ பகுதி விஹாரையொன்றின் விஹாராதிபதியாக இருந்த 47 வயதுடைய குறித்த விஹாராதிபதிக்கே இத்தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நஸ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2010ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி குறித்த சிறுமி அறநெறி பாடசாலைக்கு கல்வியை பெற சென்றிருந்த போது குறித்த விஹாராதிபதி இச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
He will be released on Presidential pardon soon after the elections are over.
ReplyDelete