Header Ads



ஜனாதிபதிக்காக முஸ்லிம்கள் துஆ கேட்கிறார்கள், ஹக்கீம் - றிசாத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள் - கடந்த 8 மாதங்களில் ஏதாவது அநீதி நடந்ததா..?

(அஸ்ரப் ஏ சமத்)

ஜனாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ச அவா்கள் 2025 வரைக்கும் அவரே ஜனாதிபதியாக இருக்கப்போகின்றாா்  இந்த்த பாராளுமன்றத்  தோ்தலில் நாம்  ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனைக் கட்சிக்கு வாக்களித்து  முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசில் ஒரு  பங்காளிகளாகிக்   கொள்ளுதல் வேண்டும்.  இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை ரவுப் கக்கீம் மற்றும் றிசாத் பதியுத்தீனும்   இனைந்து பிழையானதொரு  வழிக்குக் கொண்டு செல்கின்றனா்.. இதற்கு இனியும் நாம் துணைபோகக் கூடாது.. 2010ல் முஸ்லிம்கள் தமிழர்கள்  சிங்களவா்கள் இணைந்து மகிந்த ராஜபக்ச  அவா்களின் தலைமையிலான அரசில்  ஒற்றுமையாக வாழ்ந்தோம்.    இந்தத் முஸ்லிம்  தலைவா்கள்தான்  முஸ்லிம்களை  துாரமாக்கிணாா்கள்.   என ஜனாதிபதி சட்டத்தரணியும்  அலி சப்றி உரையாற்றினாா்

நேற்று 29ஆம் திகதி    தெகிவளையில் நடைபெற்ற  கூட்டத்தில் உரையாற்றும்போதே அலிசப்றி மேற்கண்டவாறு தெரிவித்தா் ்இக் கூட்டத்தில் .  25 மாவட்டங்களிலும் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச , நகர சபை   உறுப்பிணா்கள்   கலந்து கொண்டனா் இக்  கூட்டத்தில் தலைமை வகித்து  உரையாற்றும்போதே    மேற்கண்டவாறு  அலி சப்றி உரையாற்றினாா். 

தொடாந்தும் அவா் அங்கு உரையாற்றுகையில் -

முஸ்லிம்களாகிய நாம் தொடா்ந்தும் பிழையான வழிக்குச் செல்லாது மீள சிந்தித்து செயல்படல் வேண்டும். 2015 ஜக்கிய தேசிய கட்சியின்  வலைக்குள்  வீழ்ந்து றிசாத் பதியுத்தீன் மற்றும் ரவுப் கக்கீம்   முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்து விலக்கி  முஸ்லிம்களை துாரமாக்கிணாா்கள். இங்கு வருகை தந்துள்ள உள்ளுராட்சி சபை உறுப்பிணா்கள் இணைந்து நாட்டின் சகல பிரதேசங்களுக்குசம் சென்றும்    முஸ்லிம்களை எமது பக்கம் கொண்டுவருதல் வேண்டும்.  குறிப்பாக வட கிழக்கில் வாழும் முஸ்லிகளிடம் இந்த தலைவா்க்ள சொல்லும்  பசப்பு வாத்தைகளை   நம்பி ஏமாறவேண்டாம் அவா்கள்  நமது   மக்களை மீண்டுமொரு படுபாதை குழிக்குள்   கொண்டு சென்றுவிடுவாா்கள்.   

 நமது மக்களை எமது ஜனாதிபதி,  பிரதமா் மகிந்த ராஜபக்ச ஆகியோா்கள்  தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவாருங்கள்.. இந்த  பொதுஜன  பெரமுன அரசு  இந்தத் தோ்தலில்  மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆசனங்களை பெறுவது உறுதியாகிவிட்டது. ஆகவே தான்் நாமும் அதில் பங்களாகிக் கொள்ளுதல் வேண்டும்   

இங்கு வருகை தந்துள்ள மக்கள் பிரதி நிதிகள்  தமது  பிரதேசத்தில்   பல்வேறு பிர்ச்சினைகள்  உள்ளதை இங்கு சுட்டிக்காட்டினாா்கள்.   இங்கு நாம் இந்தத் தோ்தலில் எவ்வாறு இந்த அரசுக்கும் பங்களிப்பது என்றுதான் ஆராய்வதற்கு ஒன்று கூடினோம்.   பிரதமா் மகிந்த ராஜபக்சவிடம்  இவ்வாறு ஒரு கூட்டம் நடைபெற 24 மணித்தியாலத்திற்கு  முன்பு தொலைபேசி மூலமே   வேண்டுகோள் விடுத்தேன்  அவா் உடன் கட்டாயம் வருகிறேன். என சொல்லி இவ்விடத்தில் வருதை தந்துள்ளாா்கள்..இவ்வாறான தலைவா்களுடனேயே நாம் இணைந்து  விருப்பமாக அரசியல் செய்கின்றோம். 

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலயங்களுக்குள்  சொப்பிங் பேக்குடன் அன்று விடுதலைப்புலிகள்   துரத்தினாா்கள்.  மகிந்த ராஜபக்ச அவா்கள் தலைமையில்ான அரசு  உலக நாடுகளில் யுத்தத்தினால் வெல்ல முடியாத ஒரு  யுத்தத்தினை வென்றெடுத்தாா்கள். இந்த நாட்டினை மீண்டும் ஜக்கியத்தினை சமாதானத்தினை ஏற்படுத்தினாா்கள்.   முஸ்லிம்களாகிய நாம்  யாழ்ப்பாணம், மன்னாா். கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற  சகல பிரதேசங்களுக்கு சென்று  நமக்குச் சொந்தமான  காணி   நிலங்கள்  வீடுகளுக்கும்  சென்று வருகின்றோ்ம். அதே போன்றுதான்  .  ஆயிரக்கணக்கான காணிகளில்    மீளவும் எமது விவசாயிகள்  விவசாயம் செய்கின்றனா் . .  அன்று விடுதலைப்புலிகள் வட கிழக்கில் யுத்தம் செய்தபோது    அவா்களது தனியான  பொலிஸ் நிலையம், , நீதிமன்றம், நிர்வாகம், என  இருந்து வந்தது.  அதற்குள் முஸ்லிம்கள் சிக்கித் தவித்தாா்கள். அவா்களது காணி நிலங்களுக்கு போகமுடியாத சுழ்நிலை  இருந்தது. வியாபாரம் செய்ய முடியாமல் இருந்தது.  இதனால்  பல துண்பங்களை முஸ்லிம்கள்  அனுபவித்தாா்கள். யுத்தம் முடிவடைந்தபினனா் தான்  நாம் சமதானக் காற்றினை சுவாசிக்கின்றோம். அதற்காவது நாம் நன்றிக் கடமையுள்ளவா்களாக இருத்தல்  வேண்டும். 

2012ல் நடைபெற்ற ஜக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத்தில்    மகிந்த ராஜபக்ச  தலைமையிலான அரசுக்கு அரபு நாடுகள் பல உதவின. குறிப்பாக  சவுதி , பாக்கிஸ்தான் துாதுவா்கள்  முன்நின்று இலங்கை அரசுக்கு சாா்பாக வாக்குஅளித்தாா்கள்.   அந் நேரத்தல் நானும்  அவ்விடத்தில்  சென்று அவதானித்தேன். அதன் பிறகு முஸ்லிம்களை   வேறாக்குவதற்கு பல தீய சக்திகள்  திட்டம் தீட்டினாா்கள். அதற்குள் நாம் அகப்பட்டோம்.  

அன்மையில் நான் கிழக்கு மாகாணத்த்திறகுச் சென்றிருந்தேன். . அங்குள்ள பள்ளிவாசல் தலைவா்கள் ,பெற்றோா்கள்.  எமது பிள்ளைகளை போதைவஸ்து, ஜஸ் போதை வற்றில் இருந்து பாதுகாத்துத் த ாருங்கள் எனக் கூறினாா்கள். ்இதனை  இந்த நாட்டில் இருந்து அகற்றுவதற்கு ஜனதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் எடுத்துக் கூறுங்கள் எனச் சொன்னாா்கள். 

  சிங்கள, தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் யாராக இருந்தாலும் இநத் போதையில் இருந்து விடுபடுவதற்கு அதற்கான நடவடிக்கைகளையும் ஜனாதிபதி துரிதமாக எடுத்து வருவதை நீங்கள் காணக்கூடியதாக உள்ளது.    உலகில் எந்தத் தலைவா்கள் முன்னெடுக்காத  வகையில் அவா் கோரோனா தொற்று நோய்யினால் முன் எடுத்த நடவடிக்கையை பாராட்டுகின்றனா்  அன்மையில் பேருவளையில் கூட  லொக்டவுன் செய்யும் போது வித்தியமான கோணத்தில்  அதனை  கதைத்தவா்கள் தற்பொழுது இந்த ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுளை கொடுத்தல் வேண்டும் துஆக் கேட்கின்றனா்.   காரணம் பேருவைளக்குள் தொற்றுக்குள்ள வானவா்களை அகற்றி  கொரோணா நிலையத்தில் 200 பேரை கொண்டு வைத்து அவா்களுக்கு எவ்வித  குறையுமின்றி நோன்பு பிடிப்பதற்கு அதனை திறப்பதற்கு  அவா்களது ஜக்கடமைகளை செய்வதற்கு இராணுவம் உதவி  எமது பேருவுளை பிரதேசத்தில் கூடுதலாக பரவாமல் தடுத்ததை அவா் மிக நுண்னியமாக அதனை அமுல்படுத்தியதை மெச்சுகின்றனா். இந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசல்கள்  உடைத்துவிடுவாா்கள பெண்கள் பர்தா அணிய விடமாட்டாா்கள் எனச் சொன்னாா்கள் கடந்த 8 மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஏதாவது அநீதி நடைபெற்றுள்ளதா? என அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.

7 comments:

  1. மதிப்புக்குரிய அலி சப்ரி அவர்களே, நீங்கள் ஒரு கட்சி சார்ந்து அரசியல் செய்யலாம். அதே போல ஏனைய முஸ்லிம்களும் அவரவர் சாரந்த கட்சிகளுக்காக அரசியல் செய்வதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் சார்பான கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கவேண்டும் என நீங்கள் இலக்கு வைத்து செயற்பட்டால், உண்மையில் உங்கள் செயற்பாட்டால் இந்த சமூகத்துக்கு எதிர்காலத்தில் என்ன நலன்கள் இருக்கும் என்பதை உண்மையாகவே எடுத்துரைத்து அவர்களின் வாக்குகளைக் கேளுங்கள்.அதற்குப் பகரமா ரிஷாத் பதியுதீன், ரஊப் ஹகீமுக்கு தயவு செய்து ஏச வேண்டாம். அவ்வாறு நீங்கள் ஏசும் போது நிச்சியம் நீங்கள் சார்ந்த கட்சிக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைப்பது பாதிக்கப்படும் என்பதைக் கவனமாக எண்ணிப் பாருங்கள்.

    ReplyDelete
  2. Muslims should "NOT" be agitated with "FOOLISH" statements made by politicians like Wimal Weerawansa or other Nationlistic monks like Gnasara Thera. SLPP and leading politicians of the Sri Lanka Peoples Freedom Allaince have already acknowledged that the Muslims casted just over 300,000 votes for Gotabaya Rajapaksa at the 2019 Presidental Elections. Gamanpila has confirmed this in a TV interview. The Muslim Vote bank is hoping to cast at least around 600,00 votes to the SLPP/Pottuwa/Sri Lanka Peoples Freedom Alliance at the next general elections in August 2020, Insha Allah. IDIOTIC politicians like Wimal Weerawansa and anti-muslim so-called nationlistic politicisns are worried about this "TREND" and is trying to "STOP" these votes being given to the "POTTUWA" so that they can be "barking" at the Muslims for the next 4 years. The Muslims should look at the larger picture and move towards becoming "PARTNERS" in the process of forming the next 2/3 majority governemt by Mahinda, Gotabaya and Basil. Attorney-at-Law Ali Sabri Marjan Faleel Hajiar are also propogating this. The ONLY way to make IDIOTIC, so called nationalistic politicians like Wimal Weerawansa and anti-muslim elements is to shut his voice in the SLPP/POTTUWA ALLAINCE by Muslims casting our votes to the SLPP/POTTUWA ALLAINCE, Insha Allah. Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa and Basil Rajapaksa have invited the Muslims to vote their group. Attorney-at-Law Ali Sabri and Marjan Faleel Hajiar should be "SEEN" by the Muslims as their "GOTABAYA" and "MAHINDA" in the MUSLIM COMMUNITY/VOTE BANK who can bring about a "CHANGE" in Muslim politics and political leadership, Insha Allah.
    THIS IS WHY "THE MUSLIM VOICE" HAS BEING PRAYING, SINCE JUNE 2014 THAT IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims that are WISE and REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should NOT recognize the Muslim parties AND POLITICIANS as named by Attorney-at-Law Ali Sabri who have caused more and more harm than good to the Muslim community/VOTE BANK since September 2000 (after Rauf Hakeem was elected as the ."thesiya thalaivar" (national leader) of the Sri Lanka Muslim Congress which later on split into the ACMC, All Ceylon Makkal Congress, National Congress and the national Unity Allaince. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should come forward to accept the SRI LANKA PODUJANA PERANUMA as the New Political Force that the Muslim Vote Bank should support/vote "UNANIMOUSLY" Insha Allah. This is the only way the "MUSLIM FACTOR ISSUES" can be "RESOLVED" with the new government that will come to power by Attorney-at-Law Ali Sabri and Marjan Hajiar at the helm as the Muslim lobbying leaders and other Muslim representatives of the SLPP who will go to parlaiment in August 2020, Insha Allah.
    IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. நக்குண்டார் நாவிழந்தார்...

    ReplyDelete
  4. * 2015 தோல்விக்கு காரணம் தர்கா நகர் அழிப்பு

    * 2020 தோல்விக்கு காரணம் ஜனாஸா எரிப்பு.

    முஸ்லிம்கள் உணர்வு ரீதியாக ஒரே உடம்புக்கு ஒப்பான சகோதரர்கள் என்ற நபிகளாரின் வார்த்தைகள்  உயிரோட்டமானது என்பது  என்றும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

    இறந்த பின்கூட இன்னொருவரைத்தான் எரிப்பதற்கு கையெழுத்திட கட்டாயப்படுத்துவர்.

    உயிருள்ளபோதே எவரும் தம்மை எரியூட்ட தாமே வாக்களிப்பார்களா?

    உங்களால் முடிந்தால் ஒரே தொலைபேசி அழைப்பில் இதை நிறுத்திக் காட்டுங்கள்.

    ReplyDelete
  5. who is he to say this? what he has done to our muslim community? he has done lot to Mahinda's family only. to get a national seat, this rubbish trying put our leaders on trouble, it is also one of the contract has given to him by Mahinda family to get it done.

    our community has faced lot of problems on past and still we facing lot more, as a lawyer is he has file any cases in the court or attend any cases in the court by representing our community? what kind of rights he has to blame our leaders?

    ReplyDelete
  6. Sri lanka is the only country in the world cremated janaza without following WHO guideline that followed 182 countries. This was done to revenge Muslims.

    ReplyDelete

Powered by Blogger.