Header Ads



825 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை


கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இலங்கைக்கு நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள 825 பேரை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளதாக, வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் பேராசிரியர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை (11) பிலிப்பனைஸ்-மெனிலா நகலிருந்தும், 13 ஆம் திகதி மாலைத்தீவின்- மாலி நகரிலிருந்தும், எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான்- லாகூர் நகரிலிருந்தும் இலங்கையர்கள் அழைத்துவரப்படவுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும்,  இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானங்கள் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.