Header Ads



7 மோட்டார் சைக்கிள்களில், வந்த வாள்வெட்டுக் குழு

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியில் வாள்வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை இராணுவம் மடக்கிப் பிடித்துள்ள பரபரப்பான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

இந்தப் பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழி மறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளுடன்விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.