24 மணித்தியாலங்களுக்குள் 381 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே உட்பட போதைப்பொருட்கள் வைத்திருந்த 381 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஹெரோயினுடன் 133 பேர், கஞ்சாவுடன் 92 பேர், ஐஸ் போதைப் பொருளுடன் 121 பேர் மற்றும் கோடா உடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment