சகல பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 22 முதல் மீளத் திறக்கப்படுகிறது
சகல பல்கலைக்கழகங்களும் இறுதியாண்டு பரீட்சைக்காக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீள திறக்கப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறுதியாண்டு பரீட்சை நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டுமென, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment