Header Ads



குருநாகலில் 21ம் திகதி, பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 21 ம் திகதி குருநாகலில் தனது பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளார்.

ஆளும் பொதுஜனபெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் குருநாகலில்எதிர்வரும் 21 ம் திகதி ஆரம்பமாகவுள்ளன என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் சட்டங்களையும் சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என பொதுஜனபெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் வேட்பாளர்களை பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் குருநாகலில் ஆரம்பமாகவுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் பெதுஜனபெரமுனவில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளின் தலைவர்கள் பிரசன்னமாகியிருப்பார்கள் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.