Header Ads



கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் 20 வருடங்கள் நிலைத்து நிற்க வாய்ப்பிருக்கின்றது - கருணா


முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு இன்று (29) நடைபெற்றது.

தேவையற்றவர்களுக்கு வாக்களிப்பீர்களாக இருந்தால் உங்கள் வளத்தை இழப்பீர்கள் என்பதை தான் தெரிவித்துக் கொள்வதாக கருணா அம்மான் கூறினார்.

நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் மதிப்பிற்குரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிலைத்து நிற்க வாய்ப்பிருக்கின்றதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனென்றால் எதிர்க்கட்சியே இன்று இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்திருக்கின்றதால் இதிலே அரசுடன் பலம் மிக்கவர்கள் யாரென்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கருணா அம்மான் இதன்போது தெரிவித்தார்.

ஆகவே தாம் வெற்றியடைந்து அரசுடன் இணைந்து பாரிய சேவையாற்ற வேண்டும் என்பதற்காககத் தான் இன்று களமிறங்கியுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
    (அல்குர்ஆன் : 3:26)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.