Header Ads



2011 உலககிண்ண ஆட்டநிர்ணய சதி – குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

2011 உலககிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்ற முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் குற்றசாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

விளையாட்டுச்சட்டங்கள் தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான விசேட விசாரணை பிரிவிற்கு நான் வழங்கிய எழுத்து மூல வேண்டுகோளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இந்த முறைப்பாட்டினை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்;ட விசாரணை பிரிவினை உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தெளிவுபடுத்துமாறும் விளையாட்டுத்துறை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சரிடம் அவரது குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. ALIBABA STARTED GAMES.MAY GOD DRIVEN THEM.

    ReplyDelete
  2. They're targeting Sanga & Mahela who opposed construction of New Cricket Stadium!

    ReplyDelete

Powered by Blogger.