Header Ads



வெளிநாடுகளில் உள்ள 2000 இலங்கையர்களுக்கு கொரோனா - இதுவரை 23 பேர் மரணம்


மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இதுவரை வெளியாகிய தகவலுக்கமைய 2000 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்களுக்குள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன..

இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.