தொல்பொருள் தலங்கள், அருங்காட்சியகங்கள் ஜூலை 1 முதல் திறப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பொதுமக்கள் பயன்பாட்டு பகுதி ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு இவை ஜூலை முதலாம் திகதியிலிருந்து திறக்கவுள்ளதாக புத்தசாசன, கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
அப்படியே அந்த airport ம் கொஞ்சம் ஓபன் பன்ன சொல்லுங்க பாஸ்����
ReplyDelete