இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1900 ஐ கடந்தது
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 5 பேர் குவைட்டில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் ஒருவர் பங்களாதேஷில் இருந்து வந்தவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 1901 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 1342 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் தற்போது 548 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment