Header Ads



கொரானா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது

COVID-19 தொற்றுக்குள்ளான 27 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரானா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 13 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 863 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.