Header Ads



தேர்தல் திகதியை அறிவியுங்கள் - UNP

(நா.தனுஜா)

எதிர்வரும் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்  வலியுறுத்தியிருக்கிறார்.

தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பினும்> இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அகிரவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதியளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக இருந்தபோதிலும்> வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிள்குள் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

எனவே இத்தகையதொரு நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தனது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன்> சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்து நாட்டுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.