சஹரான் உள்ளிட்ட தற்கொலைத்தாரிகள், அனைவரும் கொழும்பில் சுற்றித் திரிந்துள்ளனர் - Hiru
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதாக குறித்த குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீம் உள்ளிட்ட குண்டு தற்கொலைத்தாரிகள் அனைவரும் கொழும்பு நகரில் சுற்றித் திரிந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரிகள் சிலர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறித்த விடயத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் நடந்த நேரத்தில் கொழும்பு மத்திய காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக செயல்பட்டு வந்த காவல்துறை அதிகாரி சாந்த விக்ரமசிங்க மற்றும் கொழும்பு கோட்டை காவல்துறையின் பொறுப்பதிகாரியாக செயல்பட்டு வந்த பிரதான தலைமை காவல்துறை ஆய்வாளர் சரத் குமாரசிங்க ஆகியோரும் நேற்றைய -19- தினம் குறித்த ஆணைக்குழுவில் இது தொடர்பில் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Hiru News
Hiru News
Post a Comment