Header Ads



டுபாயில் இருந்து நாடு திரும்பியோரில் சிலரை, கைது செய்யத் தயாராகிறது CID

- தமிழன்  பேப்பர் -

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சிலரை கைது செய்வதற்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தயாராகி வருகிறது.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் - ஈஸ்ரர் தின தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் கொண்டிருந்த சர்வதேச வலையமைப்பில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்களென சி ஐ டி தகவல்கள் தெரிவித்தன.

ஏற்கனவே இவர்கள் குறித்து டுபாய் பொலிஸாருக்கு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்ததாக மேலும் அறியமுடிந்தது.

கொரோனா சூழ்நிலையில் வந்த இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தீவிர பாதுகாப்புடன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களெனவும் சொல்லப்பட்டது.

கிட்டத்தட்ட 10 பேர் அளவில் இவ்வாறு இருப்பதாக சி ஐ டி வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.



No comments

Powered by Blogger.