Header Ads



ஜனாதிபதி கோத்தாபயவுடன், மோடி தொலைபேசியில் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இவ்வாறு தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றதாக இந்தியப்பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டள்ளதாவது,

இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது. 

இலங்கைய எமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.