Header Ads



சஜித் அணி அரசாங்கத்துடன் உடன்பாடு, எதிர்க்கட்சித் அலுவலகத்தை எப்படி பயன்படுத்தலாம் - ரவி கேள்வி

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை தமது பணிகளுக்காக எப்படி பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை பயன்படுத்தும் உரிமை ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு கிடையாது எனவும், அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையிலேயே அவர்களால் அந்த அலுவலகத்தை பயன்படுத்த முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்துடன் உடன்பாடுகளை செய்துக்கொண்டுள்ளவர்கள் யார் என்பது எதிர்காலத்தில் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.