பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின், முக்கிய கவனத்திற்கு
பாடசாலைகள் மூலம் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளவர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த விடயத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக அனுமதிகளை உறுதிப்படுத்தும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில் தற்போது இந்த உறுதிப்படுத்தல்களை பாடசாலைகளின் அதிபர்களும், உப அதிபர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்வர் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment