Header Ads



பெளத்தத்தை அவமதித்த விவகாரம் - ரஞ்சனுக்கு எதிராக தேரரின் முறைப்பாடு, சி.ஐ.டி.க்கு அழைப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இணையம் ஊடாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளுக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை 22 ஆம் திகதி  முற்பகல் 9.30 மணிக்கு அவரை கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் ஆஜராக  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 இணையத்தில், யூ ரியூப் ஒன்றில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தும் போது, இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில்  கருத்து வெளியிட்டதாக தேரர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

No comments

Powered by Blogger.