வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சற்று, பொறுமையாக இருக்க வேண்டும்
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் சற்றே பொறுமையாக இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் கிரமமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறும் கோரியுள்ளார்.
இதுவரையில் ஆறாயிரம் இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அதில் மூவாயிரம் பேர் மாணவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment