Header Ads



இலங்கை திரும்புபவர்கள் அனைவருக்கும், தனிமைப்படுத்தல் கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் அனைவரும் தங்களை கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளவர்கள் குறித்த தகவல்கள் அனைத்து தூதரகங்கள் மூலமும் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

செயலணியே எந்தநாட்டில் உள்ளவர்களை முதலில் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கு அழைத்து வரப்படுபவர்கள் பிரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கைக்கு அழைத்துவரப்படுபவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் கட்டாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.