பேஸ்புக்கில் பரவிய பொய்யான, செய்தியால் குடும்பஸ்தர் தற்கொலை - இலங்கையில் அதிர்ச்சி
முகநூலில் பரப்பப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் யாழில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த இராசதீபன் (29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான இந்த நபருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, போலி முகநூல் கணக்கில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட மனவிரக்தியில் இந்த தற்கொலை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று(19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment