Header Ads



கொரோனா ஒழிப்புப் போரட்டம், எக்காலத்திலும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய வீரமிகு செயலாகும் : சஜித்


(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தாதியர் உள்ளடங்கலாக சுகாதாரப்பிரிவின் அனைத்துத் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் எக்காலத்திலும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய வீரமிகு செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கிறார்.

இன்று -12- சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருந்த பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன்நின்று அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்துத் தாதியருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தாதியர் உள்ளடங்கலாக சுகாதாரப் பிரிவின் அனைத்துத் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் எக்காலத்திலும் நாம் நினைவில்கொள்ள வேண்டிய வீரமிகு செயலாகும்.

மேலும் இப்போராட்டத்தில் முன்னணியில் நின்று இயங்கும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரையும் நினைவுகூரும் அதேவேளை, அவர்களுக்கான சக்தியையும், தைரியத்தையும் வழங்குமாறு பிரார்த்திக்கிறேன்.

No comments

Powered by Blogger.