Header Ads



ஐரோப்பாவிலேயே உயர்ந்த கொரோனா, இறப்பு வீதம் கொண்ட நாடானது பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 32,375 ஆக உயர்ந்ததையடுத்து, பிரித்தானியா ஐரோப்பாவிலேயே உயர்ந்த கொரோனா இறப்பு வீதம் கொண்ட நாடாகியுள்ளது.

தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதற்கு முன் 29,079 பலி எண்ணிக்கையுடன் இத்தாலிதான் உயர்ந்த இறப்பு வீதம் கொண்ட நாடாக இருந்தது.

ஏப்ரல் 24 நிலவரப்படி, இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29,710 ஆக இருந்தது.

ஏப்ரல் 26ஆம் திகதி ஸ்காட்லாந்தில் 2,272 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஏப்ரல் 29 நிலவரப்படி வட அயர்லாந்தில் 393 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் இன்று இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பலியானவர்களின் எண்ணிக்கையை சேர்த்துள்ளதையடுத்து, கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 32,375 ஆக உயர்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.