கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என, சகல உறுப்பினர்களிடமும் உறுதிமொழி
கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என சகல உறுப்பினர்களிடமும் உறுதிமொழி பெற்றுக்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு விலகப் போவதில்லை என உறுதிமொழி அளித்து இதுவரையில் சத்தியக்கடதாசியில் கையொப்பமிடாத அனைத்து உறுப்பினர்களிடமும் எதிர்வரும் நாட்களில் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி சேர்ந்த போதும் கட்சிகளின் தனித்துவத்தை பாதுகாத்தல் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியை விட்டு விலகப் போவதில்லை என சத்தியக்கடதாசி பெற்றுக்கொள்வதன் நோக்கம் இதுவேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment