Header Ads



பிரதமர் மகிந்தவின் வீட்டுக்குச் சென்று, அமெரிக்க தூதுவர் சந்திப்பு


இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று -05- முற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் ஊடகப்பிரிவின் தகவல்படி, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கொவிட்-19 பூகோள பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற:போது இடம்பெற்று வருகின்ற நிலையில், அதுதொடர்பாக இந்த சந்திப்பின் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நோய்ப்பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மற்றும் ஒன்றுபட்ட ஒத்துழைப்பு வழங்கல் தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.