Header Ads



நீர்கொழும்பில் நாய் சுட்டுக்கொலை; ஒருவர் கைது - 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப்பிணையில் விடுதலை


- எம்.இஸட்.ஷாஜஹான் -

நீர்கொழும்பு பெரியமுல்லை  பகுதியில், இன்று (07) காலை நாய் ஒன்று சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சாந்த அந்தோனியார் வீதியில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கிளமன் பெர்ணான்டோ சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல்போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்ணான்டோவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட 'மெக்ஸ்' என்ற நாயே சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளது.  

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்,  நீர்கொழும்பு பதில் நீதவான் பிரிமால் அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுததப்பட்போது, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ் வழக்கு விசாரணை இம்மாதம் 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.