வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, சட்டத்தை கடைபிடித்து உதவுங்கள் - நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் நிர்வாக முறைமையினால் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்பட்டாலும் இந்த பயங்கரமான வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை கடைபிடித்து உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ள ஜனாதிபதி, நாம் போராடுவது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் எனவும் கூறியுள்ளார்.
Post a Comment