Header Ads



கொரோனாவை தாக்கி அழிக்கும் எதிர்ப்பு மருந்து - இறுதி கட்டத்தில் இஸ்ரேல்

கொரோனா வைரசை தாக்கி அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி நப்ஃதலி பென்னெட் தெரிவித்ததாவது:-

''கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. 

இஸ்ரேல் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த எதிர்ப்பு மருந்து பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரசை தாக்கி அழிக்கும்’’ என்றார்.

இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா எதிர்ப்பு மருந்து மனித உடலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவலை பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவிக்கவில்லை.

No comments

Powered by Blogger.