மறு அறிவித்தல்வரை டுபாயில் உள்ள, இலங்கை தூதரகம் மூடப்பட்டது
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் மீள் அறிவிக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அவசரநிலை காரணமாக தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் slemb.abudhabi@mfa.gov.lk அல்லது கட்டணமில்லா 800119119 என்ற இலக்கத்திற்கு தூதரகத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள் காரணமாக எல்லா அழைப்புகளுக்கும் இப்போதே பதிலளிக்க முடியாமல் போகலாம். 24 மணி நேரத்திற்குள் மீள அழைப்போம்.
மூடலின் போது முடிந்தவரை மின்னஞ்சல் அனுப்ப தூதரகம் ஊக்குவிக்கிறது.
இந்த அவசர காலங்களில் எங்கள் சிறந்த கவனத்தை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்”என்று தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment