கை கழுவுதல் மற்றும் பிற வழிகாட்டுதல்கள், அடுத்த ஆண்டிலும் தொடரும்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளி மற்றும் பிற வழிகாட்டுதல்கள் அடுத்த ஆண்டிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி, கை கழுவுதல் மற்றும் பிற நடவடிக்கைகளை வெறும் 2-6 மாதங்களுக்கு மட்டுப்படுத்த முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக இடைவெளி மற்றும் பிற நடவடிக்கைகளைத் தொடரத் தவறினால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூகத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பல வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார்.
வழிகாட்டுதல்கள் விரைவில் சட்டமாக்கப்படும் என்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்களும் தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment