Header Ads



ஊரடங்கு இல்லை என்றால், ஜனாஸா ஊர்வலம் இலட்சத்தை தொட்டிருக்கும்...



ஊரடங்கு இல்லை என்றால் ஜனாஸா ஊர்வலம் இலட்சத்தை தொட்டிருக்கும்.

அதில் நசுங்கியே பலர் 
காயப்பட்டும் இருக்கலாம்.

பிறர் காயப்படுவதை விரும்பாத கலாநிதி தனது இறுதி ஊர்வலத்திலும் 
யாரையும் காயப்படுத்த 
விரும்பவில்லை போலும்..
மனிதர்கள் இல்லாத குறைக்கு 
மலக்குகள் நிறைந்து இருப்பார்கள்.

எப்பொழுதுமே அமர்க்களத்தை விரும்பாத மாமனிதரின் இறுதி ஊர்வலம் 
அவரைப் போலவே 
ஆர்ப்பாட்டம் இல்லாமல் 
சாந்தமாக இறைவனடி சேர்ந்தது.

நீங்கள் மறைந்தாலும்
உங்கள் சிந்தனைகளும், ஆக்கங்களும் 
என்றுமே மறையாது.

கோடி மலக்குகள் கூடி 
சுவன கன்னிகள் பாடி 
உங்களை வரவேற்றிருப்பார்கள் 
மண்ணறைக்கு...

நீங்கள் வளர்த்த கலா நிலையம்,
நீங்கள் புகட்டிய பயன்மிக்க கல்வி
உங்களை உங்கள் இறைவன் பொருந்திக்கொள்ள போதுமானதே..

ரூமி ஹாரிஸ்

1 comment:

  1. Dear Brother/Sister

    Please Add the Word "INSHA ALLAH"

    I also pray Allah to forgive his sin and reward him with paradise..

    ReplyDelete

Powered by Blogger.