Header Ads



கனடாவிலும், அமெரிக்காவிலும் இருந்து இலங்கை மாணவர்களின் குழு நாடு திரும்பியது

கனடாவிலும் அமெரிக்காவிலும் உயர்கல்வியைத் தொடரும் இலங்கை மாணவர்களின் ஒரு குழுவும் இன்று -05- நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

இந்த குழு லண்டனில் இருந்து திரும்பும் இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக நாட்டை வந்தடையவுள்ளது.

இதேவேளை நாட்டிற்கு திரும்ப விரும்பும் மற்றுமோர் இலங்கை மாணவர்கள் குழுவினை அழைத்துவர மேலும் ஒரு சிறப்பு விமானம் நாளைய தினம் சிங்கபூர் நோக்கி புறப்படடவுள்ளது.

இதற்கிடையில், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.