Header Ads



கொழும்பு - கம்பஹா மாவட்ட மக்களின், செயற்பாடு வருத்தமளிப்பதாக உள்ளது

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களின் செய்பாடு வருத்தமளிப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இரண்டு மாவட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அறிமுகம் செய்யப்பட்ட வேலைத்திட்டத்தை சரிவர முன்னெடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு எதிராக சிலர் செயற்படுவதனை கடந்த சில நாட்களாக காண முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டத்திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.