பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
இலங்கை மாணவர்கள் உட்பட 208 பேர் பிரித்தானியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில் பலர் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டல்களுக்கு நாள் ஒன்றுக்கு 7500 ரூபாய் இவர்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment