Header Ads



மக்ரிப் பாங்கு ஓசையை எதிர்பார்த்து, தினமும் காத்திருக்கும் சுனில் குடும்பம்


ஆலப்புழா மாவட்டம் - தத்தம்பள்ளி அருகில் இரட்டகண்டம் கிராமத்தில் ஒரு குடும்பம் மேசை நிறைய ஆகாரங்களுடன், மக்ரிப் பாங்கு ஓசையை எதிர்பார்த்து தினமும் காத்திருக்கிறார்கள்.. 

எலக்ட்ரிகல் வேலை செய்யும் சுனில், சுனிதா தம்பதி கடந்த மூன்று வருடங்களாக தவறாது நோன்பு பிடித்து வருகின்றனர். 

ஆலப்புழாவில் முட்டை வியாபாரம் செய்யும் சுனிலின் நண்பர் ஸஜீர் அழைப்பு ஏற்று ஒருமுறை இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுனில் குடும்பம் மூன்று வருடங்களாக தங்களது வீட்டில் நோன்பு இருக்கின்றனர்.

கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் கிறிஸ்டோ, கிறிஸ்டினா வும் பெற்றோருடன் நோன்பு இருக்கின்றனர்.

சுனிதா பெருநாள் முடிந்த பிறகு நோற்கும் சுன்னத்தான ஆறு நோன்பும் கடைபிடித்து வருகிறார் என்பது மகிழ்ச்சியானா தகவல்.

Colachel Azheem

3 comments:

Powered by Blogger.