கொரோனா அலை இன்னும், இலங்கையில் இருந்து அகற்றப்படவில்லை
நாட்டில் மதுபான விற்பனையகங்களை மீண்டும் திறந்தமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
மதுபான விற்பனையகங்களில் வாடிக்கையாளர்கள் நடந்து கொள்ளும் விதம் மன்னிக்க முடியாதது என்றும் அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இது தொடர்பில் கூறுகையில்,
மதுபான விற்பனையகங்களுக்கு செல்வோர் சுகாதார ஒழுங்குவிதிகளை ஏற்றுக்கொண்டாலும் கொரோனா நாட்டில் இருந்து அகற்றப்பட்டு விட்டதைப்போன்றே நடந்துக்கொள்கின்றனர்.
கொரோனா வைரஸ் அலை இன்னும் உலகில் இருந்தும் இலங்கையில் இருந்தும் அகற்றப்படவில்லை.
எனவே வெளியில் செல்கின்றபோது ஒரு மீற்றர் இடைவெளி மற்றும் சுகாதார ஒழுங்குவிதிகளை கடைபிடிப்பது அவசியமானது என்று சொய்ஸா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுபான விற்பனையங்களில் சுகாதார ஒழுங்குவிதிகளை சீர்படுத்தவேண்டியது மதுபான விற்பனையகங்களின் உரிமையாளர்களது பொறுப்பாகும்.
இதனை அவர்கள் செய்யமுடியாது போனால் அவ்வாறான விற்பனையகங்களை மூடிவிடுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் சொய்ஸா கோரியுள்ளார்.
Post a Comment